திங்கள், 31 ஜனவரி, 2011

ஆரை.



1.       மூலிகையின் பெயர் :- ஆரை.

2.       தாவரப்பெயர் :- MARSILEA 
                      QUADRIFOLIA.

3.       தாவரக்குடும்பம் :- MARSILEAFEAE.

4.       பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.

5.       வேறு பெயர்கள் :- ஆராக்கீரை,  
         ஆலக்கீரை என்பன. ஆங்கிலத்தில் 
     பொதுவான பெயர் 
     European water clover என்று சொல்வர்.

6.      வளரியல்பு :- ஆரை ஒரு நீர்தாவரம். 
    இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே 
    உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள். 
    மத்திய, தெற்கு ஐரோப்பாவில்  காணப்
    பட்டது. பின் ஆப்கானீஸ்தான் 
    இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு 
    ஆண்டுகளுக்கு முன்பு வட அமரிக்காவில் 
    காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து 
    தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக 
    கொண்ட மிகவும் சிறிய செடி. இது 
    ஆற்றங்கரை, குழம், ஏரிக்கரை களிலும், 
    மணல் பாங்கான ஈரமான இடங்களிலும் 
    நன்கு தானே வளர்கிறது.  இது தண்ணீரில் 
   மிதக்கும், தரையிலும் வளரும். இதற்கு 
   லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு 
   குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி 
   மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும் 
   உண்டு. இதன் இலைகள் பச்சையாக இருக்கும். 
   இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து 
   வளரும். இது சுமார் ஒரு அடி நீழும். 
   அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி 
   இன விருத்தி செய்வார்கள்.

7.   மருத்துவப்பயன்கள் :- ஆரை வெப்பம் 
   நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது. 
   பாம்புக் கடியைக் குணமாக்கும்.

      கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை        
      நிறுத்தும்.

      கீரையைச் சமைத்துண்ண பகு மூத்திரம் 
      போகும்.

      இதன் இலையை நிழலில் உலர்த்திப் 
      பொடி செய்து 30 கிராம் தூளை அரை 
      லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, 
      பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை 
      பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், 
      சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.


---------------------------------(தொடரும்)







வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொன்னாவிரை.




1.      மூலிகையின் பெயர் :- பொன்னாவிரை.

2.      தாவரப்பெயர் :- CASSIA SENNA.

3.      தாவரக்குடும்பம் :- CAESALPINIACEAE.

4.      பயன் தரும் பாகங்கள் :- இலை வேர் முதலியன.

5.      வளரியல்பு :- பொன்னாவிரை ஆங்கிலத்தில் ALEXANDRIAN என்று சொல்வர். எல்லா வகை  நிலங்களிலும் வளரக் கூடிய சிறு செடி. இது சுமார் 3 அடி   உயரம் கூட வளரக்கூடியது. இதன் இலைகள் கூரான  முனையுடையவை. வெழுத்த பச்சை நிறமாக இருக்கும்.  நான்கு ஜோடி கூட்டிலையாக இருக்கும். இதன் பூக்கள்  ஆவரம்பூப் போல் மஞ்சளாக இருக்கும். காய்கள்  தட்டையாக நீண்டிருக்கும். காய்கள் காய்ந்த பின் கருப்பாக இருக்கும், வெடிக்கக் கூடியவை. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக் கூடியது. விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

6.     மருத்துவப் பயன்கள் :- பொன்னாவிரை நுண் புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

பொன்னாவிரை இலை, விதை சமன் அரைத்து எலுமிச்சை அளவு வெந்நீரில் கொள்ளச் சுகபேதியாகும், மோர் சாப்பிடப் பேதி நிற்கும்.

இதன் இலையுடன் கீழாநெல்லி சமன்  சேர்த்து நெல்லிக்காயளவு காலை, மாலை, மோரில் கொள்ள மஞ்சட்காமாலை தீரும்.

பொன்னாவரை வேர் 15 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு10 கிராம், அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்து வரப் பித்தபாண்டு தீரும்.

இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளித்துத் தேங்காய் எண்ணெய் தடவச் சிரங்கு 3 நாளில் மறையும்.

     கர்பிணிப் பெண்களும், குடல் புண் உள்ளவர்களுக்கு இந்த      மருந்துகளைக் கொடுக்கக் கூடாது.
 
     -------------------------------------------------(தொடரும்)