ஞாயிறு, 28 அக்டோபர், 2018

தவறான கருத்து


தவறான கருத்து:

சித்த மருத்துவம் ஒரு மூலிகை மருத்துவம்(Herbal Medicine) என்ற தவறான கருத்து மக்களிடம் உள்ளது.
சில ஊடகங்களும் கூட சித்த மருத்துவம் என்றாலே ஏதோ சில மூலிகைகளை அரைத்து சாப்பிடுகின்ற மருத்துவம் என ஒரு உருவகத்தை உண்டாக்குகின்றன. இது முற்றிலும் தவறு.
சித்த மருந்துகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உலோகங்கள்(Metals), உபரசங்கள், தாதுஉப்புக்கள், நவமணிகள்(Nine gems), பஞ்சசூதப் பாசாணங்கள், மற்றும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துச் சரக்குகள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam5உலோகங்கள் என எடுத்துக் கொண்டால் இரும்பு, காரீயம், வெள்ளி, தங்கம் என 11 வகையான உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் இன்று Maggi-யில் அதிக அளவில் இருப்பதாகக்கூறி தடைசெய்யப்பட்டுள்ள ‘காரீயம்’(Lead) கூட ஒரு மருந்துச் சரக்காக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
பாசாணங்கள் என எடுத்துக்கொண்டால் (Arsenic Compound), கந்தகம்(Sulphur), வெள்ளைப் பாசாணம்(White Arsenic), மிர்தார் சிங்கி, வீரம், மயில் துத்தம், அப்பிரகம், துருசு போன்ற 64 வகையான வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
siththa maruththuvam4உப்புகள் என எடுத்துக்கொண்டால் இந்துப்பு(Rock Salt), கல்லுப்பு(Asphalt), சீனாக்காரம்(Aluminum potassium sulphate), சூடன்(camphor), நவச்சாரம்(Ammonia Chloride), பச்சைக் கற்பூரம், வெங்காரம் (Borax), வெடியுப்பு(Potassium Nitrate) போன்ற 25 விதமான வேதிப்பொருட்கள் சித்த மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 120 வகையான உபரசங்கள் (Secondary Minarals) சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பூநாகம், வெள்ளைக்கல், நிமிளை, கல்மதம், அன்னபேதி போன்றவற்றைக் கூறலாம்.
மேலும் மிகவும் சக்தி வாய்ந்த மருந்துச் சரக்குகளான ரசம்(Mercury), ரசசெந்தூரம், இலிங்கம், பூரம், வீரம்(hydrargyrum Perchloride) போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். சித்த மருத்துவம் மூலிகை மருத்துவம்தான் என இத்தனை நாள் நினைத்திருந்தோமே இவ்வளவு வேதிப்பொருட்கள் சேர்த்துத்தான் சித்த மருந்துகள் தயாரிக்கிறார்கள் என்றால் (Chemicals), அது பக்க விளைவை ஏற்படுத்தாதா?, அவை பாதுகாப்பானதா? என நீங்கள் யோசிக்கலாம்.
நிச்சயம் பாதுகாப்பானதுதான். ஏனென்றால் ஒவ்வொரு மருந்துச் சரக்கையும் (Raw Drug) பயன்படுத்துவதற்குமுன் அது சுத்தி(Purification) செய்யப்படுகிறது.
அதாவது அதிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்குவதற்கான செயல்முறைதான் சுத்தி எனப்படுகிறது.
ஒவ்வொரு சரக்கிற்கும் பல்வேறு சுத்தி முறைகளை சித்த மருத்துவ முன்னோடிகள் கூறிச்சென்றுள்ளனர்.
உதாரணத்திற்கு இன்று ‘Maggi’-யில்அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் Lead என்ற காரீயத்தின் சுத்தி முறையை மட்டும் கூறுகிறேன். ஐவேலிச் சமூலச்சாறு, அதாவது Diplocyclos Palmatus என்ற தாவரத்தின் சாற்றினை பயன்படுத்தி காரீயத்தை சுத்தி கொள்ளலாம்.
மேலும் நொச்சி சாற்றினைப் பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம். மேலும் வெள்ளாட்டின் சிறுநீர் மற்றும் பிரண்டையை பயன்படுத்தியும் சுத்தி செய்யலாம்.
இப்படியெல்லாம் பல வேதிமுறைகளை கடந்துதான் சித்த மருந்துகள் உருவாகின்றன. அவற்றைத்தான் நாங்கள் நோயாளிகளுக்கு வழங்குகிறோம்.
எனவே சித்த மருத்துவம் என்பது ஏதோ ஒரு மூலிகையை உணவாக பயன்படுத்தி நோயை நீக்குகின்ற மருத்துவ முறை அல்ல.
ஆக, சித்த மருந்துகள் மூலிகை மருந்துகள்(Herbal Medicine) அல்ல. சித்த மருந்துகள் மூலிகை மற்றும் தாதுப்பொருட்கள் அடங்கிய மருந்துகள்(Herbo mineral).
இவை மட்டுமல்லாது உயிரினங்களிலிருந்தும் மருந்துச் சரக்குகளை பயன்படுத்துகிறது சித்த மருத்துவம்.
siththa maruththuvam7உதாரணமாக ஆமை ஓடு, கிளிஞ்சல், கஸ்தூரி, கடல்வாழ் உயிரினங்கள், உயிரினங்களின் பித்த நீர், பறவைகளின் இறகுகள், முட்டைகள், அவைகளின் ஓடுகள், இரத்தம் போன்றவற்றையும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
சித்த மருத்துவத்தின் உண்மை வீரியம் இப்படி கடல் அளவு இருக்கும் பொழுது, கடற்கரையில் கிடக்கும் சிப்பியை மட்டும் பார்த்து இதுதான் கடலில் இருக்கிறது என்பது போல, ஒரு சில மூலிகைகளை மட்டும் கொண்டு செய்யும் மூலிகை மருந்துகளே சித்த மருத்துவம் என்பது போன்ற கருத்துக்களை மாற்றுவதற்கே இந்தக் கட்டுரை.

சனி, 30 டிசம்பர், 2017

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக

'மூலிகைவளம்'  இலவச ஈ புத்தகமாக

அன்பர்களே வணக்கம்.
மூலிகைவளம் வலைப்பதிவு பல ஆண்டுகளாக எழுதி வந்தேன். தற்போது எனது இடது கண் குழுக்கோமாவால் தெறிவதில்லை. அதனால் இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். இதுவரை எழுதியதை எனது இரு  நண்பர்கள் இலவச ஈ புத்தகமாகத் தயார் செய்துள்ளார்கள். அதை முழுதும் படிக்க விரும்புவோர் கீழ் கண்ட தலைப்பில் பதிவிரக்கம் செய்து பயனடையுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

http://freetamilebooks.com/ebooks/mooligai-valam/


ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் epub” mooligai-valam.epub – Downloaded 40955 times – 6 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் mobi” mooligai-valam.mobi – Downloaded 8033 times – 11 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “மூலிகை வளம் A4 PDF” mooligai-valam-A4.pdf – Downloaded 23935 times – 5 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மூலிகை வளம் 6 inch PDF” mooligai-valam-6-inch.pdf – Downloaded 14725 times – 6 MB




செவ்வாய், 29 செப்டம்பர், 2015

பருத்தி






பருத்தி

மூலிகையின் பெயர் –: பருத்தி..

தாவரவியல் பெயர் -: GOSSYPIUM HERBACEUM.

;தாவரக்குடும்பம் -: .MALVACEA..

பயன்படும் பாகங்கள் -: இலை, மொட்டுகள், பூ மற்றும் விதை.

வளரியல்பு -: பருத்தி கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. பச்சையான அகலமான இலைகளை மாற்றடுக்கில் கொண்டது. மஞ்சளான பூக்களைக் கொண்ட செடி. இது சுமார் 4அடி முதல் 5 அடி வரை வளரக்கூடியது. . பூக்கள் முற்றி 3 அரை கொண்ட சப்பைகள் உண்டாகி பிஞ்சாக பச்சை நிறத்தில் இருக்கும். பிஞ்சுகள் முற்றி காய்ந்து பருத்திப் பஞ்சாக விரியும். பஞ்சு வெள்ளை நிறமாக இருக்கும்.. இது தமிழகமெங்கும் வளர்கிறது. பஞ்சிலிருந்து கொட்டையைப் பிறித்தெடுத்து எண்ணெய் எடுக்குவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் உபயோகிக்கிறார்கள். மருந்தாகவும் பயன் படுகிறது. பஞ்சிலிருந்து நூல் எடுத்து ஆடைகள் செய்யப் பயன்படுத்திகிறார்கள். இதில் பல ரகங்கள் உண்டு. நீர் பாய்ச்சியும், மானாவாரியாகவும் பயிர் செய்வார்கள். வரலச்சுமி என்ற ரகம் நல்ல மகசூல் கொடுக்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள் இது மலமிளக்கி, காமம் பெருக்கி, கோழையகற்றி மேலும் இரத்த கிரஹினி, முழங்கால் வலி, பெண் குறியில் வலி, சிறுநீர்தடை, நீர்ச்சுருக்கு, மாதவிடாய் தடை போன்றவறை குணமாக்க வல்லது.

பருத்துயின் இலை அல்லது மொக்கையாவது கால் பலம் அரைத்து, அரைஆழாக்குப் பசும்பாலில் கரைத்து உண்ணச் சீழ்ப் பிரமேகம், இரத்த பித்த ரோகம், இரண சோபை ஆகியவற்றை நீக்கும்.

இதன் கொழுந்து அதிசார பேதியையும், இதன் இலையைச் சாம்பலாக்கி இரணங்களில் போட ஆறும். பருப்பு லேகியங்களில் சேர்க்கத் தாது விருத்தி உண்டாகும்.

பருத்தி பெரும்பாட்டைப் போக்கும்’ –யோகர் நிகண்டு 1500

பருத்தி விதை, அரிசித் திப்பிலி, நெற்பொறி, ஏலக்காய், சர்கரையும், தேனும் மேற்படி சூரணத்துடன் கலந்துண்ண விக்கல், வாந்தி தீரும்.



----------------------------------------------------------------------------------------------------(தொடரும்)